ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை அடித்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல். இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலால் படகு ஒன்றுக்கு ரூ.1லட்சம் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.