புழல் 23, 24வது வார்டுகளில் மழைநீர் கால்வாயில் இரும்பு கிரில் திருட்டு

புழல்: புழல் 23, 24வது வார்டுகளில் மழைநீர் கால்வாய் அருகில் அமைக்கப்படும் இரும்பு கிரில்கள் திருபோவதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த நிலையில், மழைநீர் செல்வதற்கு கால்வாய் அருகில் சுமார் 15 அடி தூரத்திற்கு ஒவ்வொரு இடத்திலும் 7 கிலோ எடைகொண்ட இரும்பு கிரில்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மழைநீர் சாலைகளில் தேங்காமல், இந்த இரும்பு கிரில்கள் வழியாக சென்றுவிடும். அந்த வகையில் மாதவரம் மண்டலம் புழல் 23, 24வது வார்டு பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி 60% முடிவடைந்த நிலையில், புழல் பாலாஜி நகர், ஒற்றக்கடை தெரு, திருவள்ளுவர் தெரு, சக்திவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட கால்வாய் அருகில் இரும்பு கிரில்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த, மழைநீர் கால்வாய் இரும்பு கிரில்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.

இதனால், சாலை வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரும்பு கிரில்கள் இல்லாத பகுதிகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து இரும்பு கிரில்கள் இல்லாத இடங்களில் புதிதாக அமைத்திடவும், கிரில்களை திருடிய மர்ம நபர்கள் மீது புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புழல் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல் 23, 24வது வார்டுகளில் மழைநீர் கால்வாயில் இரும்பு கிரில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: