பைக் மீது லாரி மோதி நண்பர்கள் 3 பேர் பலி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியபாடி கணபதி நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ் (19). சரண்ராஜ் (21). ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் சுவாமி கும்பிடுவதற்காக ராஜேஷ் சென்னையில் இருந்து அவரது வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து நண்பர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் ஆரணிக்கு சென்றுள்ளனர். பைக்கை சரண்ராஜ் ஓட்டிச்சென்றார்.

இரவு 11 மணியளவில் மணிகண்டனை அவரது வீட்டில் விடுவதற்காக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, சேவூர் பைபாஸ் புறவழிச்சாலையில் கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம் அருகே அவர்களது பைக் மீது லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். லாரி டிரைவர் செங்கம் அடுத்த அரசங்கன்னி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதனை(26) போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

The post பைக் மீது லாரி மோதி நண்பர்கள் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: