வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் 24ம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வலுவான தரைக்காற்று 40 கிமீ வேகத்தில் வீசும். அக்டோபர் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி வரை இருக்கவும் வாய்ப்புள்ளது.

அதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். 25, 26ம் தேதிகளிலும் அதேநிலை நீடிக்கும். வங்கக் கடல் பகுதியை பொருத்தவரையில் தெற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது. 24, 25ம் தேதிகளில் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று ்அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: