மோடியின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: பாஜ முன்னாள் நிர்வாகியான தமிழிசை சவுந்தரராஜன், மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வரும் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறது.

காமராஜர் ஆட்சி பற்றி குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாவிட்டால் காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற நோக்கத்துடன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தம்மை வருத்திக்கொண்டு பாதயாத்திரை மேற்கொண்ட அவரது தந்தை குமரி அனந்தனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

காமராஜர் ஆட்சி என்பது மக்கள் நலன் சார்ந்து தமிழக மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லுகிற பொற்கால ஆட்சியாகும். ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது அவருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

The post மோடியின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: