சென்னையில் வரும் 29ம் தேதி சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா

சென்னை: தமிழ்­நாடு டாக்­டர் அம்­பேத்­கர் சட்­டப் பல்­க­லைக்­கழக பதி­வா­ளர் கெளரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்­பில் கூறியிருப்­பதாவது: சட்­டப் பல்­க­லைக்­க­ழகத்­தின் 14வது பட்­ட­மளிப்பு விழா வரும் 29ம் தேதி பெருங்­குடியில் உள்ள அதன் வளா­கத்தில் நடைபெற­வுள்ளது.

இதை­யடுத்து, கடந்த மே மாதம் நடத்­தப்­பட்ட இறுதி பரு­வத் தேர்வில் தேர்ச்சி பெற்று சட்­டப் படிப்பை முடித்­த­வர்­க­ளும், இது­வரை பட்­ட­மளிப்புக்கு பதிவு செய்­த­வர்­க­ளும் விண்­ணப்பிக்க அழைப்பு விடுக்­கப்­ப­டுகி­றது. தகுதியான­வர்­கள் பல்­கலைக்­க­ழக இணை­யத­ளமான //www.tndalu.ac.in என்ற பக்கத்திற்கு சென்று வரும் 27ம் தேதிக்குள் பட்­ட­மளிப்பு விழா­வுக்கு பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் வரும் 29ம் தேதி சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: