தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மல்ல சமுத்திரம், செப்.21: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(21ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மல்லசமுத்திரம் மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார்.

முகாமில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர். தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: