தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி

தூத்துக்குடி, செப்.14: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சாலை பணிகள், கழிவு நீர் கால்வாய், மழைநீர் வடிகால், பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், ராஜகோபால் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி appeared first on Dinakaran.

Related Stories: