திருக்காட்டுப்பள்ளியில் விநாயகர் சிலை காவிரி ஆற்றில் கரைப்பு

 

திருக்காட்டுப்பள்ளி, செப். 13: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சக்தி விநாயகர் சிலை கடந்த 7ம் தேதிஅமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை வரை 9 கால பூஜைகள் நடைபெற்று மாலை ராம.மகாதேவன் முன்னிலையில் திருக்காட்டுப்பள்ளி டி.ஆர்.ராஜா குழுவினரின் நாதஸ்வர இன்னிசை மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சியுடன் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு பிரதான வீதிகள் வழியாக காவிரிக்கரையை அடைந்து விநாயகர் சிலை காவிரி ஆற்றில் சங்கமிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை நகர இளைஞர் நற்பணி மன்ற மற்றும் விழாக்குழுவின் தலைவர் ஜெயராமன், இளைஞர்கள் வரதன், சுவாமிநாதன், கணேசன், சதிஷ் செய்திருந்தனர். விழாவில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர்மெய்யழகன், வார்டு உறுப்பினர் பாஸ்கரன், வழக்குரைஞர் .ஜெயக்குமார், பாண்டித்துரை, பாலசுந்தரம், நகர இளைஞர் நற்பணி மன்றத்தார் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

The post திருக்காட்டுப்பள்ளியில் விநாயகர் சிலை காவிரி ஆற்றில் கரைப்பு appeared first on Dinakaran.

Related Stories: