செம்பனை உடையில் பொறித்த கார்த்தி

‘பொன்னியின் செல்வன்’ கதையில் வந்தியத்தேவனுடன் இணைந்து பயணிக்கும் செம்பன் என்ற குதிரையை, தனது உடையில் பொறித்து அணிந்துள்ளார், ‘பொன்னியின் செல்வன் 1’ஐ தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் வந்தியத்தேவன் வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுவதும் தனி விமானத்தில் பயணித்து இப்படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிகழ்வுகளில் கார்த்தி, படத்தில் தன்னுடன் பயணிக்கும் செம்பன் என்ற குதிரையின் உருவத்தை உடையில் பொறித்து வித்தியாசம் காட்டியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நாவல் முழுக்க பயணிக்கும் ஒரே கதாபாத்திரம், வந்தியத்தேவன். அந்த வந்தியத்தேவனுடன் பயணிக்கும் இன்னொரு கதாபாத்திரம், செம்பன் என்ற குதிரை. அந்தக் குதிரையின் நினைவாகவே கார்த்தி அதன் உருவத்தை தனது உடையில் பொறித்துள்ளார்.

The post செம்பனை உடையில் பொறித்த கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: