சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாவிஷ்ணு கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்ட விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து தலைமைச் செயலாளரிடம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

The post சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: