உடனே டாக்டர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருப்பையில் கட்டி இருப்பதாக கருதப்பட்டது. இதனால் மேலும் தெளிவுபடுத்துவதற்காக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதில், கரு முழுமையாக கலையாததால் 24 வார குழந்தை எலும்பு கூடு கருப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் எலும்புக் கூட்டை அகற்றினர். இதுகுறித்து கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சிவானந்தா, கூறியதாவது: இது மிகவும் அரிதாகவே நடக்கும். கரு முழுமையாக கலையாததால் எலும்பு கூடு கருப்பையில் தங்கிவிடுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற 25 க்கும் குறைவான சம்பவங்கள் நடந்துள்ளது என்றார்.
The post மாத்திரை சாப்பிட்டும் கரு முழுமையாக கலையவில்லை பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு: அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர் appeared first on Dinakaran.