அந்த கட்சியை சீமான் உருவாக்கவில்லை, பல தமிழ் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது. பிரபாகரனையே தான் அறிமுகப்படுத்தியது போன்று சீமான் மேடைகளில் பேசி வருவது ஏற்புடையதாக இல்லை. ஓரளவிற்கான வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி அடைந்துள்ளது. அதற்கு சீமான் மட்டும் அல்ல, அதில் உள்ள தொண்டர்களும் தான் முக்கிய காரணம். உலகத் தமிழர்கள் திரள் நிதியின்மூலமாக அதிகளவு வருவாய் கிடைக்கிறது. அதில் சீமான், அவரது மனைவி மற்றும் அவர் பெயரில் சொத்துகள் வாங்கியுள்ளார். 2011ல் சசிகலாவிடம் இருந்து ரூ.13 கோடி சீமான் பெற்றுள்ளார். இதுபோன்ற தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளிடம் வேட்பாளர் அறிவிக்கும்பொழுது பணத்தை பெற்றுள்ளார்.
The post நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் திரள் நிதி பல கோடியை சீமான் சுருட்டினார்: மாஜி நிர்வாகி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.