இன்று அதிகாலை குப்வாரா மஜில் செக்டார் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் உஷாரான ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல், குப்வாரா தங்தார் செக்டாரிலும் தீவிர சோதனையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி பலியானார். இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஊடுருவ முயன்றபோது ராணுவத்தினர் அதிரடி appeared first on Dinakaran.