கொள்ளிடம் வட்டாரம் முதலைமேடு திட்டு, நாதல்படுகை கிராமங்களில் நாகையில் 30ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம்,ஆக.26: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post கொள்ளிடம் வட்டாரம் முதலைமேடு திட்டு, நாதல்படுகை கிராமங்களில் நாகையில் 30ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: