முகநூலில் கொலை மிரட்டல் ஊராட்சி தலைவரின் கணவர் கைது

புழல்: முகநூலில் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி, பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக பிரமுகருமான பார்த்திபன் அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கொலை சம்பவம் நடந்து ஓராண்டான நிலையில், பார்த்திபனின் அண்ணனான நடராஜன், ‘தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில் தம்பி நடத்தி காட்டுவான், துரோகிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்’ என சர்ச்சைக்குரிய வகையில் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது தம்பியின் கொலை தொடர்பாக முகநூலில் மோதல் ஏற்படும் வகையில் பதிவிட்டதாக செங்குன்றம் போலீசார், 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடராஜனை (58) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post முகநூலில் கொலை மிரட்டல் ஊராட்சி தலைவரின் கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: