நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்: மனைவி கழுத்தறுத்து கொலை; கணவர் போலீசில் சரண்


காளஹஸ்தி: நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கங்காதேவிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (33). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா (30). இவர்கள் இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வேலை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் நெல்லூருக்கு குடிபெயர்ந்தனர். அப்போது மனைவியின் நடத்தையில் மகேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். கடந்த 10ம்தேதி அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக்கொண்ட லாவண்யா தனது பாட்டி வீடான சிட்வேலுக்கு செல்ல முயன்றார். இதையறிந்த அப்பகுதியினர் அவர்களிடையே பேசி சமாதானம் செய்தனர். அதன்பிறகும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதால் நேற்று அதிகாலை லாவண்யா வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன். அங்கிருந்த கத்தியை எடுத்து தாக்கி, கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த லாவண்யா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மகேந்திரன் தனது இரண்டு குழந்தைகளுடன் சைதாபுரம் காவல் நிலையம் சென்று போலீசாரிடம், தனது மனைவியை கொன்றுவிட்டேன் என்று கூறி சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்: மனைவி கழுத்தறுத்து கொலை; கணவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: