மீட்பு பணிக்காக நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்றும் மருத்துவ குழுவினருடன்அந்த இடத்துக்கு சென்றது என நேபாள செய்தி இணையதளமான மை ரிபப்ளிக்கா தெரிவித்தது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது என அம்மாநில அமைச்சர் அனில் பாட்டீல் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் சித்வான் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தன. அதில் இந்தியர்கள் உள்பட 65 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.
The post நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 27 இந்தியர்கள் பலி: 16 பேர் படுகாயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.