இந்த நிலையில், அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழித் தகுதியினை பெற்றுத் தந்தவரும் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும், மூச்சாகவும் வாழ்ந்து, எண்பதாண்டு காலம் பொது வாழ்வு, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அவரின் நூல்கள் அனைத்தையும் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கி அரசு ஆணையிட்டது. மேலும், இந்நிகழ்வினை முதலமைச்சர் அலுவல் அறையில் நடத்திடத் தேவைப்படும் சில்லரைச் செலவினங்களை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு ரூ. 20,000/- நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டது. இத்தகைய கலைஞரின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த எனது தாயார். ராசாத்தி அவர்களுக்கும், இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் தலைவர் கலைஞர் அவர்களின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்றும் தெரிவித்தார்.
The post கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.