குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

குமாரபாளையம், ஆக.22: குமாரபாளையம்- சேலம் மெயின் ரோடு அருகே வசிப்பவர் ராஜ்குமார்(34). ஓட்டல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேகதீபா(24). இவர்களுக்கு 2வயது மகளும், 10மாத கைக்குழந்தையும் உள்ளது. குழந்தைகளை பார்த்துக்கொண்டு மேகதீபா வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி காலையில் ராஜ்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது மேகதீபா குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் தனது மனைவி, குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: