அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சிறுவன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவின் வடக்கு கரோலினா, 2580விமான நிலைய சாலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மைனாங்க் படேல்(36) என்பவர் புகையிலை பொருட்கள் கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று கடைக்குள் நுழைந்த சிறுவன் ஒருவன் கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் கடையின் உரிமையாளர் மைனாங்கை சிறுவன் கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதில் அவர் பலியானார். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவன் என்பதால் மற்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

The post அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: