சென்னை : ஆட்சியில் இருந்தபோது நீட்டை ஆதரித்துவிட்டு, தற்போது மாற்றி பேசி வருகிறார் பழனிசாமி என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று சொன்னது இப்படி பழனிசாமியின் உதடுகள்தான் என்று குறிப்பிட்ட அவர், நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்தி கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்றார்.