பின்னர் இரும்பு பைப்புகளால் 4 பேரையும் சரமாரி தாக்கியதோடு, படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலைகளை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 மீனவர்கள் நேற்று மதியம் ஆறுகாட்டுத்துறை வந்து கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 3 முறை வேதாரண்யம் மீனவர்கள் தாக்கப்பட்டதோடு, ரூ.10லட்சம் மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post இலங்கை கடற்கொள்ளையர் மீண்டும் அட்டூழியம் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்: ரூ.3 லட்சம் மதிப்பு வலைகளை பறித்து சென்றனர் appeared first on Dinakaran.