நாங்கள் ஏதோ அவரிடம் கூட்டணிக்கு சென்ற மாதிரி பேசுகிறார். இனி அதிமுக தலைமைக்கு நாங்கள் விரும்பவில்லை என்கிறார். அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமை ஏற்க வேண்டிய நிலை வந்தால், நாங்கள் நாண்டுக்கிட்டு (தூக்கிட்டு) செத்து விடுவோம். அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. 70 ஆண்டு கால திராவிட ஆட்சியை குறை கூறுகிறார். மத்தியில் ஆளுகின்ற மமதையில் வாய்க்கொழுப்புடன் அண்ணாமலை பேசுகிறார். இப்படி பேசி பேசியே மத்தியில் தனிப்பெருமான்மையுடன் இருந்த பாரதிய ஜனதா தற்போது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அண்ணாமலை போன்ற தலைவர்கள் தான். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
The post அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமையை ஏற்கணும்னா நாண்டுக்கிட்டு செத்துவிடுவோம்: செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.