ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ராஜிவ் ஜோதி யாத்திரை தொடங்கியது: 20ம் தேதி டெல்லி சென்றடைகிறது

சென்னை: வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் ராஜிவ் ஜோதி யாத்திரை நேற்று பெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், தீர்த்தி, மாநில செயலாளர் மோகன்காந்தி மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், யாத்திரை குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த யாத்திரையானது, 30 பேருடன் 5 வாகனங்களில் தரைவழி மார்க்கமாக பல மாநிலங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு டெல்லியை வரும் 20ம் தேதி சென்றடைகிறது. யாத்திரை செல்லும் வழிகளில் ராஜிவ் காந்தி புகழை பரப்பும் வகையில் துண்டு பிரசுரங்களும், வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதாக எம்.எஸ்.திரவியம் தெரிவித்தார்.

The post ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ராஜிவ் ஜோதி யாத்திரை தொடங்கியது: 20ம் தேதி டெல்லி சென்றடைகிறது appeared first on Dinakaran.

Related Stories: