வேதாரண்யத்தில் கடைமடை பாசனத்திற்கு வந்த காவிரி நீர்

 

வேதாரண்யம்,ஆக.10: வேதாரண்யம் கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் நெல் மற்றும் மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்கம் முள்ளியாற்று பகுதிக்கு காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பாசன பகுதியான தாணிக்கோட்டகம் ஷெட்டர் பகுதிக்கு வந்து சேர்ந்தது. சம்பா சாகுபடிக்கு வந்துள்ள காவிரி நீருக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி தலைமையில் விவசாயிகள் மலர் மற்றும் நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஏரளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யத்தில் கடைமடை பாசனத்திற்கு வந்த காவிரி நீர் appeared first on Dinakaran.

Related Stories: