இதையொட்டி, ராஜிவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை தொடக்க விழா நேற்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூரில் புறப்பட்ட ராஜிவ் ஜோதி யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த, ராஜிவ் ஜோதி கர்நாடக மாநிலம், பெங்களூரு வழியாக 10 நாட்கள் பயணம் சென்று டெல்லியை சென்றடைய உள்ளது. நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
The post ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்கம் appeared first on Dinakaran.