மாணவன் மீது ஆசிரியை பலாத்கார புகார் 19 வயது மபி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த மாணவன்(19)பார்மஸி கல்லூரியில் படித்து வந்தார். அந்த மாணவன் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். பயிற்சி மையத்தில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஒரு ஆசிரியை(25) மாணவன் தன்னை பலாத்காரம் செய்ததாக 3 நாட்களுக்கு முன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதன் பின்னர் போலீசார் அவரை விடுவித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த மாணவன் அன்றிரவு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தந்தை கூறுகையில், ‘‘பலாத்கார புகார் அளிப்பேன் என்று என் மகனை ஆசிரியை மிரட்டியதற்கான ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட்களை போலீசாருக்கு அளித்து உள்ளேன் ’’ என்றார்.

The post மாணவன் மீது ஆசிரியை பலாத்கார புகார் 19 வயது மபி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: