நடுவழியில் பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயிலை இழுத்து சென்ற சரக்கு ரயில் இன்ஜின்

லக்னோ: புதுடெல்லியில் இருந்து வாரணாசிக்கு நேற்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. உபி மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா-சம்ஹோ ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது காலை 9 மணியளவில் வந்தே பாரத் ரயில் திடீரென பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில் பொறியாளர்கள் விரைந்து வந்து ரயிலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்கு பிறகும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால், நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சரக்கு ரயிலின் இன்ஜினை பயன்படுத்தி வந்தேபாரத் ரயிலை பர்தானா ரயில் நிலையத்துக்கு இழுத்து வந்தனர்.

 

The post நடுவழியில் பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயிலை இழுத்து சென்ற சரக்கு ரயில் இன்ஜின் appeared first on Dinakaran.

Related Stories: