மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் மரணம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார். 71 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார்.

அவருடைய சிகிச்சை செலவுகளுக்காக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி செய்திருந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, முன்னாள் கேப்டன் கங்குலி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கெய்க்வாட் இந்தியா அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

The post மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: