தமிழ்நாட்டில் இருந்து வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு: அமைச்சர் தகவல்


சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜ.ஐ.சி.ஏ) நிதியுதவியுடன் ₹358.87 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏறத்தாழ ₹358.87 கோடியில் 2,68,815 சதுர அடி பரப்பில் 6 தளங்களை கொண்டு, 441 படுக்கைகளுடன் புதிய கட்டிடப் பணிகள் நடந்து வருகின்றன.

அத்துடன், உலக வங்கி நிதி ஆதாரத்துடன் ₹125 கோடியில் டவர் பிளாக் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், வயநாட்டிற்கு நேற்று உதகமண்டலம் மாவட்டத்தில் இருந்து 2 வாகனங்களின் மூலம் 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அனுப்பி உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் இருந்து வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: