மாஜி கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி விநாயகர் பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். பொறையாறு ரோட்டரி சங்க தலைவராக உள்ளார்.  வாடகை பாத்திர கடை நடத்தி வந்ததுடன் ஜோசியமும் பார்த்துள்ளார். நிர்மலா தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழமையான மாசிலாமணிநாதர் கோயிலில், கடந்த 26ம்தேதி இரவு சாமி தரிசனம் செய்ய அருண்குமார் ெசன்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த தீக்காயமடைந்த அருண்குமார், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

The post மாஜி கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: