அழகு நிலையத்தில் பாலியல் தொழில்: புரோக்கர் கைது

* இளம்பெண் மீட்பு

அம்பத்தூர்: வில்லிவாக்கம் அருகே அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கரை கைது செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணை மீட்டனர். மேலும், அழகு நிலைய உரிமையாளரை தேடி வருகின்றனர். சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களை அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று மதியம் வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் செய்லபடும் ஒரு அழகு நிலையத்தில் தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதியானதையடுத்து, பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் அழகு நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய வில்லிவாக்கம் பாரதி நகர் 2வது தெருவைச் சேர்ந்த மோகன் (32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில மாதங்களாக அழகு நிலையத்தில் பெண்ணை வைத்து அவர் பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

மேலும், அவரிடமிருந்து 1 செல்போன், ₹2,500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு இளம்பெண்ணை மீட்டனர். கைதான மோகனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிலையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான அழகு நிலையத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post அழகு நிலையத்தில் பாலியல் தொழில்: புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Related Stories: