செங்கல்பட்டில் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய ரவுடி ஆயுதங்களுடன் கைது


செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கொலை செய்ய சதித்திட்டம் திட்டிய ரவுடியை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சரத்திரப்பதிவு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான மாறன்(36) என்பவர் மீது 4 கொலை வழக்கு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த வல்லம் பாறைநகர் சுடுகாடு பகுதியில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் நேற்று மாறனை கைது செய்தனர். மேலும், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், மாறன் மீது வழக்கு பதிந்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செங்கல்பட்டில் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய ரவுடி ஆயுதங்களுடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: