கோவளம் கடற்கரையில் கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன்கள், பணம் பறிப்பு


திருப்போரூர்: தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 3 கல்லூரி மாணவர்கள், பைக்கில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தனர். அங்கு, பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று அதிகாலை 4.45 மணிக்கு கோவளம் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது, 3 மர்ம நபர்கள், பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்களை வழிமறித்து, லட்சுமணன் (19) என்ற மாணவனை கத்தியால் வெட்டிவிட்டு, அவர்களிடமிருந்து 3 விலை உயர்ந்த 3 செல்போன்களை பறித்துக்கொண்டு, மற்றொரு மாணவனின் கூகுள் பே மூலம் ரூ10 ஆயிரம் பணத்தை அனுப்பிக்கொண்டும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கேளம்பாக்கம் போலீசார், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் லட்சுமணன் மற்றும் அவரது நணபர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இக்கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவளம் கடற்கரையில் கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன்கள், பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: