மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி வாலிபர் பலி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் சொங்காப்புள்ளி கோயிலில் ஆடிப்படைப்பு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் புதுக்கோட்டை, காரைக்குடி. சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 8 மாடுகள் அழைத்து வரப்பட்டன. ஒரு மாடுக்கு 15 நிமிடம் ஒதுக்கப்பட்டு மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கினர். ஒரு குழுவுக்கு 9 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்தி (24) மீது மாடு பாய்ந்ததில் படுகாயமடைந்த அவர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

The post மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: