தேவைப்படும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்டால் கொலை வழக்கில் 6வதாக மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்படுவார். அதே நேரத்தில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் ஹரிஹரனுக்கு இன்றுடன் காவல் முடிவடைவதால் தனிப்படை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க உள்ளனர். கடந்த 5 நாட்களாக தனிப்படை போலீசார் ஹரிகரனிடம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் தினமும் 10க்கும் மேற்பட்டவர்களை எழும்பூர் காவலர் குடியிருப்பு பகுதி உள்ள இடத்துக்கு வரவழைத்து ரகசியமாக விசாரணை நடத்தி மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் ஒரு வக்கீலிடம் விசாரணை appeared first on Dinakaran.