இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஒன்றிய பட்ஜெட்டில் கூட்டாட்சி தத்துவத்தையே பாஜக அரசு புறக்கணித்துவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆந்திரா, பீகாருக்கு கூடுதல் நிதி கொடுத்ததை நாங்கள் ஆட்சேமிக்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கான நியாயத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசாங்கத்தை பாதுகாப்பதே ஒன்றிய பட்ஜெட்டின் ஒரே நோக்கமாக உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்பர்; ஆனால் வெளியில் போராட்டம் நடத்துவார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் : கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!! appeared first on Dinakaran.