தவறான சிகிச்சை: இ.எஸ்.ஐ. மருத்துவமனை பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் வங்கி ஊழியர் இயல்பு வாழ்க்கையை இழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிகிச்சை குறித்த ஆவணங்களை வழங்க கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மறுக்கிறது. மேலும், சிகிச்சை குறித்து நிபுணர் குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் வழக்கு விசாரணையை ஆக.19-க்கு ஒத்திவைத்தார்.

The post தவறான சிகிச்சை: இ.எஸ்.ஐ. மருத்துவமனை பதில் தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: