பைக் மோதி நீதிபதி பரிதாப பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலையை கடந்தபோது நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி பைக் மோதி உயிரிழந்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னம்பாளையம் ராம்ஸ் நகரில் நீதிபதி கருணாநிதி (58) குடும்பத்துடன் வசித்து வந்தார். நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்த இவர் விடுமுறையில் பொள்ளாச்சியில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார். சின்னாம் பாளையத்தில் உள்ள வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக காரில் நேற்று சென்றார். உடுமலை ரோட்டோரம் காரை நிறுத்திவிட்டு, எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதி நீதிபதி கருணாநிதி படுகாயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து கிழக்கு ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

The post பைக் மோதி நீதிபதி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: