சென்னை : சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐ.ஓ.சி.எல். நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நல அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.