குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை போராட்டத்தில் பங்கேற்கும் திமுக வழக்கறிஞர்கள்

 

திருப்பூர், ஜூலை 6: ஜனநாயகத்திற்கு எதிரான, அரசியலமைப்புக்கு எதிரான 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க சட்டத்துறை சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ள சென்னை நோக்கி வாகனத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணியினர், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து செல்வராஜ் எம்.எல்.ஏவிடம் வாழ்த்து பெற்றனர்.அதன்பின்னர், தி.மு.க வழக்கறிஞர்களை கொடியசைத்து செல்வராஜ் எம்.எல்.ஏ வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை போராட்டத்தில் பங்கேற்கும் திமுக வழக்கறிஞர்கள் appeared first on Dinakaran.

Related Stories: