எனது தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து 4 மணி நேரத்தில் 8 நபர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் விசாரிக்க போலீஸ் காவல் கேட்க உள்ளோம்.
இதுவரை 7 அரிவாள்கள், 3 பைக்குகளை கைப்பற்றியுள்ளோம். 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை செய்து சரியான ஆதாரங்கள் அடிப்படையில்தான் சரியான நபர்களை கைது செய்துள்ளோம். யாருக்காவது சந்தேகம் இருந்தால் சொல்லலாம். முதற்கட்டவிசாரணையில் சட்டப்படி கைது செய்துள்ளோம். சிசிடிவி மட்டுமின்றி ஆதாரங்களும் கைப்பற்றி முறைப்படி கைது செய்துள்ளோம்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை. தனியார் உணவு டெலிவரி உடை போட்டுவந்தது ஏன்? அங்குள்ள கடைக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றோம். இங்கு குற்றங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் எந்த அச்சமும் அடைய வேண்டாம். இவ்வாறு கூறினார்.
The post அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி appeared first on Dinakaran.