இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா, இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்ட தடயங்களை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், வீட்டின் இரும்பு கதவை மட்டும் பூட்டிய நிலையில், மரக் கதவை பூட்டாமல் மறந்து சென்றது தெரியவந்தது. எனவே, சித்ரா வீட்டிலிருந்து செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றார்களா அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குன்றத்தூரில் பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.