மேலும் இந்த கும்பல், துறையூரிலுள்ள சவுடாம்பிகை அம்மன் தெருவை சேர்ந்த ஒருவரிடம் வருமான வரித்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி, ரூ.5.18 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் துறையூர் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மணப்பாறை சக்திவேல்(32), தஞ்சை மணிகண்டன்(29) ஆகியோரையும் தனிப்படை போலீஸ் கைது செய்தது. கைதான 8 பேர் கும்பலிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரண்டு டூவீலர்கள் மற்றும் 8 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். கைதானவர்கள் மீது சென்னை, கோவை, கடலூர், சேலம், திருப்பூர், வேலூர், திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலும் திருட்டு, வழிப்பறி, ஆட்கடத்தல் மற்றும் அரசு துறை அதிகாரிகள் என கூறி பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து மணப்பாறை மற்றும் துறையூர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மோசடி கும்பலை திருச்சி ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.