காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி

பழநி, ஜூலை 3: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் வலசுதுரை(45), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், குதிரையாறு அணை பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் பட்டி அமைத்து ஆடு மேய்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக குதிரையாறு அணைப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் ஆடுகள் திரும்பி வந்த நிலையில், இரவு நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர். அப்போது குதிரையாறு அணை பகுதியில் காட்டுமாடு முட்டி ரத்தக்காயங்களுடன் வலசுதுரை இறந்து கிடந்தார். இது குறித்து பழநி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வலசுதுரையின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: