வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

புவனகிரி, ஜூலை 3: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி(24). இவர் சம்பவத்தன்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த கவுதம்(24) மற்றும் அண்ணாமலைநகர் மண்ரோடு பகுதியைச் சேர்ந்த மன்(21) ஆகிய இருவரும் அவரை ஆபாசமாக திட்டி, இங்கே ஏன் சிறுநீர் கழிக்கிறாய் என கேட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் பீர் பாட்டிலால் சஞ்சீவியின் தலையில் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சஞ்சீவி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கவுதம், மன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: