25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: கட்டாய கல்வி உரிமை: பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 25%ஒதுக்கீட்டில் CBSE, ICSபள்ளியை சேர்க்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில்; CBSE, ICS பள்ளிக்கு அரசு கட்டணம் நிர்ணயிப்பதில்லை அந்த பள்ளிகளை 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 25% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும்போது, 1கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

The post 25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: