தெலங்கானாவில் தொழிற்சாலை வெடித்து சிதறி 6 பேர் பலி


திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத் நகரில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் கம்ப்ரஷர் வெடித்து சிதறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் விபத்து நடந்த பகுதிக்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது தெரிய வந்தது. 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலியானவர்கள் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் .

The post தெலங்கானாவில் தொழிற்சாலை வெடித்து சிதறி 6 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: