சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்

*நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே உள்ள எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (26). கடந்த 2018ம் ஆண்டு இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின், தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுந்தரய்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் சுரேசுக்கு, 2 பிரிவுகளின் கீழ் தண்டனை அறிவிக்கப்பட்டது. போக்சோ பிரிவு 7,8 ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பிரிவு 9, 10 ன் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 ஆண்டுகள் சுரேசுக்கு தண்டனை காலமாக கருதப்படும் என அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் கூறினார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் appeared first on Dinakaran.

Related Stories: